Posts

வன்னியர்களும் மதமும்

Image
வன்னியர்களும் மதமும் - ஓர் வரலாற்றுப் பார்வை வன்னியர் என்கிற அடையாளத்துக்கு மதம் தடையாக இருந்தது இல்லை.  வன்னியர்கள் எப்போதும் - அதாவது எப்போது சாதி தோன்றியதோ அப்போதிருந்து - வன்னியர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், வன்னியர்கள் எல்லோரும் எல்லா காலத்திலும் ஒற்றை மத அடையாளத்துடன் மட்டுமே இருக்கவில்லை என்பதே உண்மை. வன்னியர்கள் அக்னியில் இருந்து உதித்தவர்கள் என்பது வன்னியர்களுடைய தனிப்பட்ட இனக்குழு அடையாளம்.  வன்னியர்கள் மட்டும்தான் நெருப்பில் தோன்றியதாகக் கருதப்படும் திரௌபதி அம்மனுக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்துகின்றனர். இந்துக்களில் மற்றவர்கள் இதனைச் செய்வது இல்லை . சமண மதமும் வன்னியர்களும் இந்து மதம் என்கிற ஒன்று உருவாவதற்கு முன்பிருந்தே வன்னியர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்துமத ஆதிக்கம் வருவதற்கு முன்பு சமணமும் பவுத்தமும் மேலோங்கி இருந்தது என்பதுதான் வரலாற்று உண்மை.  (வன்னியர்கள் பள்ளி என்று அழைக்கப்பட்டதற்கு அவர்கள் சமணர்களாக இருந்ததே காரணம் என்று தேவநேயப் பாவாணர் கூறுகிறார்). வன்னிய புராணத்தின் கதாநாயகனாக இருப்பது வாதாபி வென்ற நரசிம்மவர்ம பல்லவன். வன்னியர...

வன்னிய குல ஷத்திரிய மஹா சங்கம்

வன்னிய குல ஷத்திரிய மஹா சங்கம் கி.பி 1886 ல் இந்தியாவிலேயே முதல் முதலாக வன்னிய குல ஷத்திரிய மஹா சங்கம் என்று ஒரு சாதி சங்கத்தை மதராஸ் பிரசிடன்சியில் தோற்றுவித்த மகான் ஸ்ரீ கா.கோபால் நாயகர் அவர்கள். ஆங்கிலேய கைக்கூலிகள் வன்னியர்ககளை "பள்ளி " என்று இழிவுபடுத்தியபோது பள்ளி என்பது இழிவான சொல் அல்ல வன்னிய அரசர்கள் சமண துறவிகளுக்கு நிலம் வழங்கியதை சமணப் பள்ளி , மடப் பள்ளி என்று வழங்கப்பட்டன இதன் காரனமாக பின்னாளில் வன்னிய மன்னர்களின் வழித்தோன்றல்களுக்கு இப்பெயர் நிலைத்தது.அது உயர்வான சொல்லே என்று வ கு ஷ அதிகாரப்பூர்வ பத்திரிக்கைகளான வன்னியகுலாதித்தன் , அக்னிகுல மித்ரன் உள்ளிட்ட இதழ்களின் மூலமாக விளக்கங்கள் பல தந்தார். இன்று நாம் ஷத்திரியன் என்று காலரை தூக்கிவிட்டு கெத்தாக நெஞ்சை நிமர்த்தி நடக்க காரணமானவர்களில் இவர் முக்கியமானவர். வன்னியர்கள் (பள்ளி) என்ற பெயரை வன்னியகுல ஷத்திரியர் எனப் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்து நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடுத்து வன்னியர்கள் ஷத்திரியர் என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சுட...

வன்னி மரம் - வீரத்தின் அடையாளம்

Image
வன்னி மரம் - வீரத்தின் அடையாளம்:  தமிழகத்திலும் இந்தியாவிலும் வீரத்தின் அடையாளமாகவும், நெருப்பின் வடிவமாகவும், வெற்றியை தரும் சின்னமாகவும் 'வன்னி மரம்' கருதப்படுகிறது. தமிழர் பண்பாட்டில் வன்னி மரமும், வன்னி மரத்தின் மீது அம்பு தொடுக்கும் விழாவும் முதன்மையானவை ஆகும். வறண்ட பகுதிகளில் வளரக்கூடிய பசுமைமாறா மரம் வன்னியாகும். வன்னி மரத்தின் தாவரவியல் பெயர் ப்ரஸாபிஸ் ஸ்பைசிஜரா  (Prosopis spicigera).  மூலிகை, கால்நடைத் தீவனம், கட்டிடம் கட்ட மரம், விறகு என பலவழிகளிலும் வன்னி மரம் பயன்படுகிறது.  புராணக் கதைகள் உலகிலுள்ள எல்லா இலைகளிலும் சிறப்பானது வன்னி இலைதான் என்பதால் -  சிவபெருமான் தனது சடாமகுடத்தில் வன்னி இலையை சூடியிருக்கிறார்  என்பது இந்து மத நம்பிக்கை ஆகும். வன்னி மரம் உருவானது குறித்து ஒரு கதை உள்ளது.  புருசுண்டு முனிவரின் சாபத்துக்கு ஆளான சமி எனும் பெண் வன்னி மரமாக ஆனதாகவும், பின்னர் விநாயகரை வழிபட்டு சாபம் தீர்ந்ததாகவும் அந்த புராணக்கதை குறிப்பிடுகிறது. (சமற்கிருத மொழியில் வன்னி மரத்தின் பெயர் 'சமி' ஆகும்) வன்னி மரம் செல்வத்தை தருகிறது...

தமிழ்த் தேசியமும் வன்னியர்களும்

" தமிழ்த் தேசியமும் வன்னியர்களும்: ஒரு விளக்கம்" திராவிடக் கட்சிகளும், இந்திய தேசிய கட்சிகளும் தமிழக மக்களுக்கு எதிரானவை ஆகும். குறிப்பாக தமிழ்நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிராக அவை உள்ளன. தமிழ்நாட்டின் பல பிரிவினருக்கு இடையேயும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து, அதற்கேற்ப சமத்துவ நிலையை உண்டாக்க வேண்டும் என்கிற சமூகநீதிக் கொள்கையை அவை ஏற்கவில்லை. இந்த பட்டியலில் இனி தமிழ்த்தேசியம் பேசுவோரையும் சேர்க்க வேண்டிய தேவை நேரக்கூடும். ஏனெனில், அவர்களும் சாதி ரீதியான பிரிவுகளை சமூகநீதிக் கண்ணோட்டத்தில் அணுக மறுக்கின்றனர். " தமிழ்த் தேசியமும் வன்னியர்களும்" தமிழ்த் தேசியம் பேசுவோர் சிலர் - தற்போது 'வன்னியர்களுக்குள் உட்பிரிவு இருக்கிறது' என்றும், 'வன்னியர்கள் என்கிற சாதி அமைப்பை விட, தமிழர் என்கிற இன அமைப்புதான் மேலானது' என்றும் பேசுகிறார்கள். இந்த வாதங்கள் எல்லாம் காலப்போக்கில், இனவெறி கருத்தாக மாற்றம் எடுக்கக் கூடும்! தமிழ்நாட்டில், சாதி அமைப்பு எல்லா இடத்திலும் ஒரே தன்மையானதாக இல்லை. குறிப்பாக, ஆற்றுப்பாசனம் நடந்த பகுதிகளில் இருந்த அளவுக்கு, ஆ...

பச்சை தமிழர்கள் வன்னிய குல க்ஷத்ரியர்கள்

பச்சை தமிழர்கள் வன்னிய குல க்ஷத்ரியர்கள் தமிழ் நாட்டில் தமிழர்கள் யார் என்பதை "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" தான் சொல்லமுடியும் என்பதே சான்றுகளின் அடிப்படையில் உண்மையாகும். எங்களைவிட யார் தமிழின் மீது பெரும்பற்று வைத்திருக்கமுடியும் ? ஆனால் இன்று சிலர் வன்னியர்கள் தமிழர்களா ? என்ற கேள்வியை எழுப்புவது மிகப்பெரிய நகைச்சுவையாகும். பாவம் ஏதும் அறியாதவர்கள் அவர்கள். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி எங்கள் "வன்னிய குல க்ஷத்ரிய பெரும்குடி". சிலர் "க்ஷத்ரியர்" என்பதை சமஸ்கிருதம் என்று சொல்லுகிறார்கள். இருக்கட்டுமே , சங்ககாலத்திலேயே சமஸ்கிருதம் இருந்திருக்கிறது என்பது வரலாறாகும். மறைந்து போன சங்கத் தமிழ் நூல் "செயிற்றியம்" நால்வகை வருணநிலையைப் பற்றி மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது. அதில் "அரசர் ஜாதி" என்று "க்ஷத்ரியர்களை" மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது. எனவே இவை இரண்டும் ஒன்றேயாகும். சிலர் அரசர்களை மட்டுமே க்ஷத்ரியர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் சோழர்கள் காலத்து திருவிந்தளூர் செப்பேடு ...

வன்னியர் வீரவசனம்

VANNIYAR IS THE MASS;- சாதிக்க பிறந்தவன் சத்ரியன்" " வானிற்கு எல்லையில்லை வன்னியரினம் தோற்பதில்லை" " வையகம் பாதி வன்னியர் சாதி" " இது மண்கோட்டை என மணக்கோட்டை கட்டாதே இது வன்னியர் வாழும் கோட்டை" " வானைத் தொட்டவனும் இல்லை வன்னியரை வென்றவனும் இல்லை" " பாம்பை கண்டால் படை நடுங்கும் படையாச்சியை கண்டால் குலை நடுங்கும்" " வன்னியரை கண்டால் போதும் வங்க கடலும் வணங்கி போகும்" " வாழப்பிறந்தவர்கள் அல்ல. ஆளப்பிறந்தவர்கள்" " அக்னியில் பிறந்தோம் அகிலத்தை ஆள்வோம்" " பாயத்தெரியும் , பதுங்கத்தெரியும் , படையாச்சிட்கு பயப்படத்தெரியாது" " இனம் எங்கள் உயிருக்கு சமம்" " அடக்கு முறைகள் எங்கள் மயிருக்கு சமம்" " மண்டியிட்டுக்கிடப்ப ­ திலும் மரணிப்பதே மேன்மை தரும்" ” கடல் நீரை அள்ள முடியாது , வன்னியரை வெல்ல முடியாது” ” நாங்க உறையை விட்டு வாள் எடுத்தால் இரத்த ருசி காட்டி வைக்கும...